Search This Blog n

27 November 2012

பிரித்தானிய தமிழ் மக்களை ஒருங்கிணைத்த எக்ஸ்செல் மாவீரர் தின நிகழ்வு - ஜேர்மனிய நிகழ்வுகள்

 
லண்டன் மாநகரிலுள்ள எக்ஸ்செல் மண்டபத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் நடாத்தப்படும் தேசிய மாவீரர் தின எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர்.
இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வினை, ஒருங்கிணைப்புக் குழுவினைச் சார்ந்த சகோதரி கௌசிகா, பிரித்தானிய தேசியக் கொடி ஏற்றி ஆரம்பித்து வைத்தார்.
தமிழீழத் தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு.தனம் அவர்கள் ஏற்றிவைக்க, அதனைத் தொடர்ந்து அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த மாவீரர் செல்வங்களின் கல்லறைகள மீது தமிழ் தேசிய இனத்தின் தேசியக் கொடி போர்த்தப்பட்டது.
அதனை அடுத்து, மணி ஓசை மண்டமெங்கும் வியாபிக்க, முதன்மைச் சுடர் ஏற்றப்பட்டது. இம்முதன்மைச் சுடரினை யாழ். கோட்டை முற்றுகைச் சமரில் வீரமரணமெய்திய மாவீரர் கப்டன். ஹீரோ ராஜ் அவர்களின் பெற்றோர் சண்முகசுந்தரம், கமலாதேவி ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
இங்கு காணொளி உடாக நெடுமாறன், வைகோ ஆகியோர் மாவீரர் தின எழுச்சி உரை நிகழ்த்தினர்{புகைபடங்கள்},

0 கருத்துகள்:

Post a Comment