Search This Blog n

19 February 2013

பனிச்சரிவில் சிக்கியவர்களின் பலி எண்ணிக்கை,,


நென்டஸ் வேபியர்(Nendaz-Verbier) என்ற மலைச்சரிவில் பனிசறுக்கு விளையாட சென்றபொழுது பனிசரிவில் சிக்கி சியான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் இறந்துவிட்டார் என்று வெலஸிஸ் கேன்டுநல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
15 வயது முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள் கொண்ட ஆறு குழு கடந்த வியாழன் அன்று பனிச்சறுக்கு விளையாட சென்றுள்ளனர்.
இதில் 4 குழுக்கள் பனிச்சறுக்கு விளையாடும்பொழுது தவறி விழுந்துவிட்டனர். இதில் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
ஜெனிவாவை சேர்ந்த 48 வயது நிரம்பிய மற்றொருவர் கடந்த வியாழன் அன்றே சியான் மருத்துவமனையில் இறந்துவிட்டார் என்றும் கடந்த வார இறுதியில் 38 வயது நிரம்பிய வாடு என்பவர் மலை உச்சியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்,{ புகைபடங்கள்}.
இதுபோன்ற பல இறப்புகள் இந்த அவலாச்சி மலைச்சரிவில் நடைபெற்றுள்ளது.
மேலும் கடந்த 2011 ம் ஆண்டு முதல் 2012 ம் ஆண்டு வரை 19 பேர் இறந்துள்ளதாகவும் இந்த வருடத்தையும் சேர்த்து ஏறக்குறைய 25 நபர்களுக்கு மேல் இறந்துள்ளதாக பத்திரிக்கையின் தகவலறிக்கை தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

Post a Comment