Search This Blog n

13 March 2016

மீன் பிடியில் ஈடுபட்ட 28 இந்திய மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி வந்து சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் 28 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை, பாம்பன், தூத்துக்குடி பகுதிகளில் உள்ள கடலோரக் குப்பங்களை சேர்ந்த இந்த மீனவர்களை இன்று கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களை காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற ஒரு இயந்திரப் படகு மற்றும் இரண்டு நாட்டுப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இம்மாதம் மூன்றாம் திகதி எட்டுபேர், ஆறாம் திகதி 29 பேர், பத்தாம் திகதி நான்குபேர் என முன்னதாக 41 மீனவர்கள் இவ்வாறு
 கைதாகியுள்ளனர்.
இதன்படி இன்று கைதானவர்களுடன் சேர்த்து மொத்தம் 69 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

Post a Comment