Search This Blog n

19 March 2016

இந்தியக் குடியுரிமை இலங்கை அகதிகளுக்கு ?

தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகள் சுமார் ஒரு லட்சம் பேருக்கு, அவர்கள் விரும்பும் பட்சத்தில், இந்திய குடியுரிமையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவில் உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருமங்கலம், உச்சம்பட்டி அகதிகள் முகாமில் அதிகாரி ஒருவரின் நடவடிக்கையால் மனமுடைந்த இலங்கை அகதி ஒருவர் உயர் அழுத்தம் கொண்ட மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவத்தின் உண்மை நிலவரம் பற்றி அறிவதற்காக சென்றிருந்த உண்மை கண்டறியும் குழுவினர், இந்த முகாம்களில் வாழும் இலங்கை அகதிகள் மிகவும் துயரமான நிலையில் வாழ்ந்து வருவதாக கூறுகின்றனர். இந்த அகதிகளின் பிள்ளைகளும் குடியுரிமை இல்லாமல் தொழில் வாய்ப்புகளை பெறுவதில் சிரமப்படுவதாகவும், அவர்களுக்காவது குடியுரிமை வழங்குவதற்கு இந்திய அரசு 
முன்வர வேண்டும்.
பெரும்பாலும் 1990களிலிருந்து இந்த அகதி முகாம்களில் வாழும் இந்த மக்களுக்கு, இந்திய குடியுரிமை இல்லாத காரணத்தினால் அரசின் நலத்திட்டங்கள் கிடைப்பதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். இந்த மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான அழுத்தம் தமிழகத்திலிருந்து வரவேண்டும் என தமிழகத்தின் அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கைகளில் இந்த கோரிக்கையை முன்வைக்க வேண்டும் 
என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment