Search This Blog n

26 March 2016

காதல் ஜோடியை வனப்பகுதியில் நிர்வாணப்படுத்தி கொடுமை?

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் பாவகடா தாலுகாவை சேர்ந்தவர் ரகுராம் (23). சிக்கநாயக்கனஹள்ளியை சேர்ந்தவர் ரம்யா (20). காதலர்களான இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் கடந்த வாரம் விடுமுறை நாளில் சித்ரபெட்டா வனப்பகுதிக்கு சென்று தனிமையில் இருந்துள்ளனர்.
இதை அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் பார்த்தார். அவர் தன்னை வனத்துறை அதிகாரி என்று கூறி அவர்களை நிர்வாணபடுத்தியுள்ளார். பின் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அந்தப் பெண் சினிமா பாணியில் காலால் அவரது மர்ம உறுப்பில் எட்டி
 உதைத்தார்.
இதில் காயமடைந்த அவர், இருவரையும் பழிவாங்கும் நோக்கில், அவர்களது ஆடைகள் மற்றும் செல்போனை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது குறித்து, பாதிக்கப்பட்ட காதல் ஜோடிகள் கொரட்டகெரே போலீசில் புகார் அளித்தனர். திருடப்பட்ட செல்போனி–்ன் சிக்னலை வைத்து அரசனகெரே பகுதியைச் சேர்ந்த பீமராஜ் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment