Search This Blog n

30 March 2016

ஜெயலலிதா ராகவேந்திரன் கணேசன் மறைவுக்கு இரங்கல்?

பெல்ஜியம் குண்டுவெடிப்பில் உயிரிழந்த ராகவேந்திரன் கணேசன் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் 
தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரசல்ஸ்சில் தீவிரவாத தாக்குதலில் ராகவேந்திரன் கணேசன் உயிரிழந்த செய்த ஆழ்ந்த வேதனையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக 
குறிப்பிட்டுள்ளார்
. பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டது மிகவும் துயரகரமானது என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார். 
ராகவேந்திரன் கணேசனின் மறைவு, அவரது குடும்பத்திற்கும், இளம்மனைவி மற்றும் குழந்தைக்கும் பேரிழப்பு என்று குறிப்பிட்டுள்ள 
ஜெயலலிதா
 கடின உழைப்பு, சுறுசுறுப்பு மற்றும் அறிவாற்றல் மிக்க பணியாளர்களை சர்வதேச சமூகத்திற்கு தமிழகம் அளித்து வருகிறது  என்பதற்கு உதாரணமாக ரவீந்திரன் கணேசன் திகழ்வார் என்றும் ஜெயலிதா புகழாரம் 
சூட்டியுள்ளார். 
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் ராகவேந்திர கணேஷ்  மறைந்த செய்தியறிந்து வருந்துவதாக தெரிவித்துள்ளார். அவருடைய மறைவால் வருந்தும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கருணாநிதி 
கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

Post a Comment