Search This Blog n

07 June 2013

500 அடி பள்ளத்தில் நிலை தடுமாறி கவிழ்ந்த பஸ்:


இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் 500 அடி பள்ளத்தில் பஸ் ஒன்று கவிழ்ந்ததில் எட்டுப்பேர் பலியாகியுள்ளனர்.
சிர்மாவூர் மாவட்டம் புன்ரதாரில் இருந்து 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை அரச பஸ் ஒன்று சோலன் நோக்கி புறப்பட்டது.
5 கி.மீட்டர் தூரம் சென்றதும், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரம் உள்ள 500 அடி பள்ளத்தில் நிலை தடுமாறி கவிழ்ந்தது.
தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் பஸ்சின் இடிபாடுகளில் சிக்கியிருந்த எட்டுப் பேரின் சடலங்களை மீட்டனர்.
மேலும் உயிருடன் மீட்கப்பட்ட சிலர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஸ்சினுள் சிக்கியுள்ள மேலும் சிலரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதேவேளை பஸ்சினுள் மேலும் சிலர் உயிரிழந்து இருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.
 

0 கருத்துகள்:

Post a Comment