Search This Blog n

02 June 2013

பொலிஸ் பாதுகாப்புடன் இன்று சவானுக்கு திருமணம்


 ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அங்கீத் சவானின் திருமணம், பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் இன்று நடைபெறுகிறது.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் இடைத்தரகர்கள் மேலும் சில கிரிக்கெட் வீரர்கள் ஆகியோரை மும்பை பொலிசார் கடந்த மாதம் கைது செய்தனர்.
இவர்கள் அங்கீத் சவான், தனக்கு திருமணம் நடைபெற இருப்பதால் ஜாமினில் விடுவிக்கும்படி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, வரும் 6ஆம் திகதி வரை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில் மும்பை தாதர் பகுதியில் நடைபெறும் எளிய விழாவில் மணமகள் நெஹா சம்பரியை அங்கீத் சவான் இன்று திருமணம் செய்து கொள்கிறார்.
இந்த திருமண விழாவில் பங்கேற்க வரும் முக்கிய பிரமுகர்களை கண்காணிக்கும் பணியில் சீருடை அணியாத சிறப்பு பொலிசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
 

0 கருத்துகள்:

Post a Comment