Search This Blog n

04 June 2013

கொல்கத்தா அணிக்கு தொடர்பா?



கிரிக்கெட் சூதாட்ட வலையில் கொல்கத்தா அணியும் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் வெடித்த சூதாட்ட புகார் தொடர்பாக பாலிவுட் நடிகர் விண்டூ சிங் கைது செய்யப்பட்டார்.
இவரிடம் நடத்திய விசாரணையில், சென்னை அணியின் குருநாத் மெய்யப்பன் பிடிபட்டார். தவிர கொல்கத்தா அணிக்கும் வலை விரித்துள்ளார்.
இது குறித்து மும்பை கிரைம் பிராஞ்ச் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கொல்கத்தா அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கியை தொடர்பு கொண்டு போட்டிகள் குறித்த முக்கிய விஷயங்களை பெற முயன்றதாக விண்டூ குறிப்பிட்டார்.
ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தற்போதைக்கு வெங்கியிடம் விசாரணை நடத்தும் உத்தேசம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
 

0 கருத்துகள்:

Post a Comment