Search This Blog n

27 June 2013

பாதிக்கப்பட்ட நபரின் தோள் மீது அமர்ந்து கொண்டு செய்தி,


 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரின் தோளில் அமர்ந்து கொண்டு செய்தி சேகரித்த பத்திரிக்கையாளருக்கு வேலை பறிபோனது.
சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக பிரபல தொலைக்காட்சியில் பத்திரிக்கையாளராக வேலை செய்து வருகிறார் நாராயண் பார்ஜியன்.
இந்நிலையில் இவர் வெள்ளம் பற்றிய செய்திகளை சேகரிப்பதற்காக உத்தரகாண்ட் சென்றார்.
அங்கு சென்று பாதிக்கப்பட்ட நபர் ஒருவரின் தோளில் அமர்ந்து கொண்டு, செய்திகளை சேகரித்துள்ளார்.
இதனை யூடியூப்பில் யாரோ வெளியிட்டு விட, நாராயணுக்கு எதிர்ப்பு அதிகரித்தது. இதனால் வேலையும் பறிபோனது.
இதுகுறித்து அவர் கூறுகையில், என் மீதிருந்த மரியாதையில் நான் வேண்டாமென்று சொல்லியும் அந்த நபர் விடாப்பிடியாக என்னை தோளில் சுமந்தார்.
நாங்கள் அவருக்கு கொஞ்சம் பணமும், உணவும் கொடுத்திருந்தோம் அந்த நன்றியில் இப்படி செய்துவிட்டார், அதோடு இது அந்த கேமராமேனின் குற்றம்தான், அவர் என்னை மாட்டிவிடுவதற்காக இப்படி பண்ணிவிட்டார் என கூறி புலம்புகிறார்,{காணொளி},
 

0 கருத்துகள்:

Post a Comment