Search This Blog n

22 June 2013

காங்கிரஸை தோற்கடிக்க பாஜகாவுக்கு புதிய கட்சிகள்?


மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகாவுடன் இணைந்து காங்கிஸ் கட்சியினை தோற்கடிப்பதற்கு புதிய கட்சிகள் தேவை என அத்வானி தெரிவித்துள்ளார்.
 டில்லியில் நடைபெற்ற ஜன சங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 61 வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அத்வானி கூறுகையில், ஜனசங்கத்தின் முதல் தேசியக் குழுக் கூட்டமானது 1952-ல் கான்பூரில் நடைபெற்றது.
அப்பொழுது ஒடிசாவைச் சேர்ந்த மாநிலக் கட்சியான கணதந்திர பரிஷத்தின் தலைவர்களை அக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சியாமா பிரசாத் முகர்ஜி அழைப்பு விடுத்தார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் அவர் பேசினார் என்பதை இன்று நான் உணர்ந்து கொள்கிறேன்.
1952-ல் அவர் கூறியது இன்றைய சூழலுக்கு நிச்சயம் பொருந்தும், எனவே மக்களவைத் தேர்தலில் காங்கிரஸைத் தோற்கடிப்பதற்கு புதிய கட்சிகள் எங்களுடன் இணைய வேண்டும் என கூறினார்.
 

0 கருத்துகள்:

Post a Comment