Search This Blog n

05 January 2014

மானிய விலையில் ஆண்டுக்கு 12 சிலிண்டர்?


கொச்சியில் பெட்ரோநெட் நிறுவனத்தின் ஆலையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கையை 9-ல் இருந்து 12 ஆக உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 90 சதவீத சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 9 சிலிண்டர்களை மானிய விலையில் பெற அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,  10 சதவீதத்தினர் மட்டுமே மானியம் இல்லாத சிலிண்டர்களை வாங்குவதாகவும் கூறிய அவர், மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டமில்லை என்று கூறினார்.

0 கருத்துகள்:

Post a Comment