Search This Blog n

08 January 2014

இந்தியாவில் ரயில் தீ பிடிப்பு; 9 பேர் மரணம்

இந்தியாவில் இன்று புதன்கிழமை அதிகாலை ரயிலொன்றில் தீ பரவியதில் பெண்ணொருவர் உட்பட குறைந்தபட்சம் 09 பேர் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பையிலிருந்து மேற்கு மாநிலமான மஹாராஷ்திரா ஊடாக பயணித்துக்கொண்டிருந்த டெஹ்ரடன் அதிவேக ரயிலின் குறைந்தபட்சம் 03 பெட்டிகள் தீ பிடித்தன.

 இராண்டாம் வகுப்புப் பெட்டியில் பிடித்த தீயானது விரைவாக அருகிலிருந்த பெட்டிகளுக்கு பரவியதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தீ பிடிப்புக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் அந்நாட்டுச்; செய்திகள் தெரிவிக்கின்றன.

டிசெம்பர் மாதம் தென் ஆந்திராப் பிரதேச மாநிலத்தில்   பயணித்துக்கொண்டிருந்த ரயிலில் தீ பரவியதில் 02 சிறுவர்கள் உட்பட 26 பேர் மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

Post a Comment