Search This Blog n

22 November 2013

மனைவியின் துன்புறுத்தல்கள் குறித்து சென்னையில் 5000


ஆண்கள் புகார்; மனைவி தாக்குவதாக 10% புகார், மனைவிக்கும் பிற ஆண்களுக்கும் தொடர்பு 10%
சென்­னையில் இவ்­வ­ருடம் மாத்­திரம் மனை­வி­மார்­களின்  கொடு­மைகள், துன்­பு­றுத்­தல்கள், தொடர்­பாக சுமார் 5000 ஆண்கள் முறைப்­பாடு செய்­துள்­ள­தாக  ஆண்­களை பாது­காப்­ப­தற்­கான அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை சர்­வ­தேச ஆண்கள் தினம் அனுஷ்­டிக்­கப்­பட்ட நிலையில், இத்­த­கவல் வெளி­யா­கி­யுள்­ளது.

இந்­தி­யாவில் சென்­னை­யி­லி­ருந்­துதான் அதிக முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ள­தாக அவ்­வ­மைப்பு தெரி­வித்­துள்­ ளது.
சென்­னையில் கிடைத்த 400 முறைப்­பா­டு­களில் விவா­க­ரத்­துக்­கான கோரி க்கை விடுக்­கப்­பட்­டுள்­ளன.

இதே­வேளை, மும்­பையில் இவ்­வ­ருடம் சுமார் 2000 ஆண்கள் தமது மனை­வியின் துன்­பு­றுத்தல் தொடர்­பாக முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

ஈகோ மோதல்கள் முதல் பாலி யல் சித்­தி­ர­வதை வரை பல்­வேறு வகை­யான விட­யங்கள் தொடர்­பாக இம்­மு­றைப்­பா­டுகள் உள்­ளன.
முறைப்­பாடு செய்­த­வர்­களில் 20 சத­வீ­த­மானோர், கூட்­டுக்­கு­டும்­ப­மாக வாழ்­வது குறித்து மனை­விமார் சண்­டையை ஆரம்­பிப்­ப­தாக கூறி­யுள்­ளனர்.

சென்­னையில் முறைப்­பாடு செய்த 5000 ஆண்­களில் சுமார் 500 பேர் மனைவிமார் தம்மை தாக்­கு­ வ­தாக முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

மேலும் 10 சத­வீ­த­மான ஆண்கள் தமது மனை­விமார் அனைத்து மகளிர் காவல் நிலை­யத்தில் தம்மை பற்றி பொய்­யான முறைப்­பா­டு­களை செய்­வ­தாக கூறி­யுள்­ளனர்.  முறைப்­பாடு செய்­த­வர்­களில் 10 ஆண்கள்  தன்­னிடம் மனைவி பாலியல் திருப்தி காணாமல் திரு­ம­ணத்­துக்குப் புறம்­பான பாலியல் உற­வு­களில் ஈடு­ப­டு­வ­தாக கூறி­யுள்­ளனர்.

தான் இரவுநேர கட­மைக்கு சென்­றபின் தனது மனை­வியும் தனது சகோ­த­ரனும் பாலியல் உற வில் ஈடு­ப­டு­வ­தா­கவும் இதனால் மனை­வி­யுடன் தான் வாழ­வி­ரும்­ப­வில்லை எனவும் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

இந்­தி­யாவில் 8 நிமி­டங்­க­ளுக்கு ஒரு தடவை திரு­ம­ண­மான ஆண்கள் திரு­மண வாழ்க்கை அல்­லது பணப்­பி­ரச்­சி­னைகள் கார­ ண­மாக தற்­கொலை செய்­து­கொள்­வ­தாக இந்­தி­யாவின் தேசிய குற்­ற­வியல் பதிவு திணைக்­கள புள்­ளி­வி­ப­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

சமூக செயற்­பாட்­டா­ள­ரான எஸ்.சயீட் அலி கருத்துத் தெரி­விக்­கையில், "இந்­திய சமூ­கத்தில் ஆண்கள் பல­வீ­னத்தை வெளிப்­ப­டுத்­து­வ ­தற்கோ, முறைப்­பாடு செய்வதற் கோ, உதவி கோருவதற்கோ சொற்ப வாய்ப்புகளே கிடைக் கின்றன. எம்மிடம் முறைப்பாடு செய்யவரும் பெரும்பலான ஆண்கள் நீண்டகாலமாக மனை வியினால் துன்புறுத்தல்கள், தொல்லைகளுக்குள்ளானதாக தெரிவித்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.




0 கருத்துகள்:

Post a Comment