Search This Blog n

14 November 2013

இந்தியாவில் ராணுவப் புரட்சிக்கு வாய்ப்பே இல்லை:


இந்தியாவில் ராணுவப் புரட்சி ஏற்பட வாய்ப்பே இல்லை என்று ராணுவ முன்னாள் தலைமைத் தளபதி வி.கே. சிங் தெரிவித்தார்.

இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு வி.கே. சிங் அளித்த பேட்டியில்,
"எனது வயது வரம்பு பிரச்னை குறித்து தொடர்ந்து கேள்வி எழுந்ததன் காரணமாக, ராணுவப் புரட்சி நடத்த தில்லியை நோக்கி இரண்டு படைகளை நகர்த்தினேன் என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் என்மீது சுமத்தப்பட்டன.
இந்தியாவில் ராணுவப் புரட்சி ஏற்பட வாய்ப்பே கிடையாது. மேலும், ரகசியப் புலனாய்வுப் பிரிவை நடத்தினேன் என்றும் என்மீது தவறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இதுபோன்று குற்றம் சுமத்துவது இன்னமும் நீடிக்கிறது. இதற்கு பிரதமர் அலுவலகத்தில் உள்ள சண்டீகரைச் சேர்ந்த மூத்த அதிகாரியும், மூத்த பத்திரிகையாளர்கள் இருவருமே காரணம் என்று அவர் கூறினார்.
 

0 கருத்துகள்:

Post a Comment