Search This Blog n

04 November 2013

சிறுமியைக் கொன்ற சிறுத்தை சுட்டுக்கொலை


உத்தரகண்டில் சிறுமியைக் கொன்ற சிறுத்தைப்புலி வனத்துறை அதிகாரிகளால் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டது.
டேராடூன் மாவட்டம், தெüலாஸ் பிரவாதி மஜ்ரா பகுதியில் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுமி, பெண் சிறுத்தை தாக்கிக் கொல்லப்பட்டார்.

எனவே, மக்களைப் பயமுறுத்தி வந்த அந்தச் சிறுத்தையைக் கொல்ல வேண்டும் என வனத்துறையினரிடம், அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தைப்புலியைச் சுட்டுக்கொன்றனர்.
 

0 கருத்துகள்:

Post a Comment