Search This Blog n

22 November 2013

பொலிஸாருக்கு சார்பாக செயற்படுவதாகக் கூறி, நிந்தவூரில் தம்பதி மீது வாள்வெட்டு, தாக்குதல்!



நிந்­தவூர் பிர­தே­சத்தில் மோட்டார் சைக்­கிளில் சென்ற இனந்­தெ­ரி­யாதோர் வீடு ஒன்றில் உள்­நு­ழைந்து கணவன்இ மனைவி மீது வாள்­களால் வெட்டி தாக்­கி­விட்டு தப்­பி­யோ­டி­யுள்ள சம்­பவம் ஒன்று நேற்று முன்­தி­ன­மி­ரவு இடம்­பெற்­றுள்­ளது. இதில் படு­கா­ய­ம­டைந்த இரு­வரும் வைத்­தி­ய­சா­லையில்
 அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

தப்­பி­யோ­டி­ய­வர்­களின் மோட்­டார்­சைக்கிள் ஒன்று மீட்­கப்­பட்­டுள்­ள­தாக சம்­மாந்­துறை பொலிஸார் தெரி­வித்­தனர்.

நிந்­தவூர் மீரா­நகர் பிர­தே­சத்தில் உள்ள குறித்த வீட்டில் சம்­ப­வ­தி­னத்­தன்று இரவு 11.15 மணி­ய­ளவில் மோட்டார் சைக்கில் ஒன்றில் சென்ற இருவர் உள்­நு­ழைந்து பொலி­ஸா­ருக்கு சார்­பாக செயற்­ப­டு­வ­தாக கூறி கணவன் மனைவி இரு­வ­ரையும் வாள்­களால் வெட்டி மீது தாக்­கி­யுள்­ளனர்  இதன்­போது அவர்கள் கூக்­கு­ர­லை­யிட்டு அய­வர்கள் சென்­ற­போது தாக்­குதல் நடாத்­தி­ய­வர்கள் மோட்­டார்­சைக்­கிளை விட்­டு­விட்டு தப்­பி­யோ­டி­யுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து கணவன் மனைவி இரு­வ­ரையும்  சம்­மாந்­துறை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தி­கப்­பட்­டுள்­ள­துடன் தாக்­குதல் நடாத்­தி­ய­வர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

Post a Comment