Search This Blog n

22 May 2015

பொதுத்தேர்வு: பிறமொழியில் 500/500 மதிப்பெண்கள் பெற்று 5 பேர் முதலிடம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேர் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்காண முடிவுகளை 21.05.2015. காலை 10 மணிக்கு டி.பி.ஐ. வளாகத்தில் அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டார்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 41 மாணவ- மாணவிகள் 499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.
இரண்டாம் இடத்தை 498 மதிப்பெண்கள் பெற்று 192 மாணவ-மாணவிகளும், 497 மதிப்பெண்கள் எடுத்து 540 மாணவ-மாணவிகளூம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.
மொத்த தேர்ச்சி விகிதம் 92.9%
மொத்த தேர்ச்சி விகிதம் 92.9%, அதில் மாணவிகளில் 94.5 சதவீதமும், மாணவர்களில் 90.5 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய மாணவ–மாணவிகள், தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ள ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை செய்திருந்தது.
அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை:
அரசு பள்ளிகளில் படித்த 19 மாணவ- மாணவிகள் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
வாழப்பாடியை சேர்ந்த ஜெயநந்தனா, பட்டுக்கோட்டையை வைஷ்ணவி, பெரம்பலூரை பாரதிராஜா ஆகியோர் 499 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழில் 586 பேர் சதம்
586 மாணவ-மாணவிகள் தமிழ் பாடத்தில் 100க்கு 100 எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
ஆங்கிலத்தில் 644 பேர் சதம்
ஆங்கிலம் பாடத்தில் 644 மாணவ- மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
கணிதத்தில் 27,134 பேர் சதம்
கணிதப் பாடத்தில் 27 ஆயிரத்து 134 மாணவ- மாணவிகள் சதம் அடித்துள்ளனர்.
அறிவியலில் 1,13,853 பேர் சதம்
அறிவியல் பாடத்தில் 1,13,853 மாணவ- மாணவிகள் 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
சமூக அறிவியலில் 51,629 பேர் சதம்
சமூக அறிவியல் பாடத்தில் 51,629 மாணவ- மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பிறமொழியில் 500/500 மதிப்பெண்கள் பெற்று 5 பேர் முதலிடம்
பிறமொழிகளில் படித்த மாணவர்களில் 500க்கு500 மதிப்பெண்கள் பெற்று 5 பேர் முதலிடம் பிடித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment