Search This Blog n

28 May 2015

மீனவர் விவகாரம் - சிறிலங்கா அமைச்சருக்கு இந்தியா கண்டனம்

தமிழக மீனவர்களின் கோரிக்கை தொடர்பில் சிறிலங்காவின் மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர விடுத்திருந்த கருத்துக்கு, இந்திய அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 இந்திய வெளிவிவகார அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 65 நாட்கள் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட அனுமதிக்குமாறு தமிழக மீனவர்களால் கோரப்பட்டிருந்தது.
எனினும் இதனை மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர மறுத்ததுடன், 65 நிமிடங்களேனும் தமிழக மீனவர்களுக்கு அனுமதிவழங்க முடியாது என்று கூறி இருந்தார்.
 இது தொடர்பிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
 சிறிலங்காவின் மீனவாகளும் இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கின்றனர்.
அவர்களை இந்தியா மனிதாபிமான அடிப்படையிலேயே பார்ப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment