Search This Blog n

04 May 2015

படைவீரர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை

நாகாலாந்து மாநிலம், மோன் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் 8 பேரை ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
இதுகுறித்து பாதுகாப்புப் படை வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: மோன் மாவட்டம், சாங்லான்சுவில் பாதுகாப்புப் படையினர், நீர் எடுப்பதற்காக தண்ணீர்
 டாங்கர்களுடன் சென்றிருந்தபோது, பதுங்கிடம் ஒன்றிலிருந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அவர்கள் உயிரிழந்தனர்.
அவர்களில் 7 பேர், அஸ்ஸாம் 
துப்பாக்கிப் படையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் ராணுவ வீரர். பாதுகாப்புப் படையினர் திருப்பிச் சுட்டதில், பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்தார். மேலும் சிலர் காயமடைந்தனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

Post a Comment