Search This Blog n

31 May 2015

வெயிலில் பலியானோர் எண்ணிக்கை 1826 ஆக அதிகரிப்பு!

இந்தியா முழுவதும் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1826-ஐ தாண்டியுள்ளது. இதில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மட்டும் 960 பேர் பலியாகி உள்ளனர். கோடை வெயில் இன்றோடு முடிவடையும் நிலையில் கடந்த ஒரு வாரமாக உச்சகட்ட வெயில் வாட்டி 
வதைத்து விட்டது.
 ஓடிசா மாநிலத்தில் 43 பேர், குஜராத்தில் 7 பேர், தலைநகர் டெல்லியில் 2 பேரும் வெயிலுக்கு பலியாகி உள்ளனர். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 960 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் நேற்று ஒருநாளில் மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் பலி எண்ணிக்கை அதிகளவு காணப்படுவதால் காலை 11.30 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை செய்ய வேண்டாம் என தொழிலாளர்களை மாநில அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

Post a Comment