Search This Blog n

03 September 2015

கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கு போட்டு மாணவன் தற்கொலை

பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த உலகில் வாழ பிடிக்கவில்லை என்று தனது செல்போனில் உள்ள வாட்ஸ அப்பில் எழுதி வைத்துவிட்டு 13-வயது மாணவன் மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சானு (வயது 14) காசியாபாத்தில் உள்ள பள்ளியில் 9 வகுப்பு படித்து வருகிறான். இவன் உத்தபிரதேசத்தில் உள்ள காசியாபத்தில் அவர்களுடைய தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறான். இவரது தந்தை டெல்லியில் உள்ள பிரபல நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவரது தாய் மகனை கவனிக்காமல் துபாயில் வேலை செய்து வருகிறார். இவன் மூத்த சகோதரனுடன் காசியபாத்தில் வசித்து வருகிறான். சம்பவத்தன்று கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி டெல்லியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த அவன் கடந்த செவ்வாய் கிழமை இரவு 12.30 மணி அளவில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டான்.

மாறுநாள் காலை கண்விழித்த அவனது சகோதரன் தம்பி தூக்கில் தொங்கியிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தான் உடனடியாக அவனது அத்தைக்கு தகவல் கொடுத்தான் விரைந்து வந்த அவர்கள் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். பரிசோதனை நடத்திய டாக்டர்கள் மாணவன் இறந்தது உறுதி செய்யபடப்பட்டது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. விரைந்து வந்த போலீசார் மாணவன் தற்கொலை செய்து குறித்து விசாரணை நடத்தினர். 

அவன் பயன்படுத்திய செல்போனை கைபற்றினர். அதில் அவன் தற்கொலைக்கு முன் வாட்ஸ் அப்பில் ஒரு கடித்தை எழுதி வைத்துள்ளான் அதில் பணத்திற்கு முக்கியதுவம் கொடுக்கும் இந்த உலகில் எனக்கு வாழ பிடிக்கவில்லை என்று எழுதபட்டிருந்தது. இதனை கைபற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment