Search This Blog n

07 September 2015

அகதிகள் முகாமில் ஈழத்தமிழர் தீக்குளித்து தற்கொலை

தமிழகத்தின் திருச்சியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில்,  மூன்று வயது குழந்தையின் தாய் ஒருவர்  தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருச்சி, கொட்டப்பட்டு  இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் ராமஜெயம். இவரது மனைவி ரூசாமிலி  இலங்கை தமிழர்களான இவர்களுக்கு, கடந்த, நான்காண்டுக்கு முன் திருமணம் நடந்தது.
இந்தநிலையில், ராமஜெயம் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால், கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் மனமுடைந்த ரூசாமிலி, வீட்டில் தனியாக இருந்தபோது, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார்.
கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால் காப்பாற்றும் முயற்சிகளும் பயனளிக்கவில்லை. இதனால், ரூசாமிலி, தீயில் கருகி பரிதாபமாக இறந்தார்,
இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாக
 தெரிவிக்கப்படுகின்றது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment