Search This Blog n

21 September 2015

நீதிமன்ற வாசலில் ரவுடி வெட்டிக் கொலை.?

 திண்டுக்கல் நீதிமன்ற வாசலில் பிரபல ரவுடி ஜேசுராஜ் பொதுமக்கள் முன்னிலையில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூட்டுக்கும் புகையிலைக்கும்

பிரியாணிக்கும் புகழ்பெற்ற திண்டுக்கல், ரவுடிகளுக்கும் பெயர் பெற்ற நகரமாகிவிட்டது. கடந்த 2013ஆம் ஆண்டு திண்டுக்கல் நீதிமன்ற வளாகம் அருகே கவுன்சிலர் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் பத்திரிகையாளர்கள் உட்பட பலரும் படுகாயமடைந்தனர்.

கடந்த ஆண்டு 53 வழக்குகளில் தொடர்புடைய திண்டுக்கல் பிரபல ரவுடி மோகன்ராம் திருப்பூரில் பதுங்கியிருந்த போது பிடிபட்டான். இவன் சென்னையை நடுங்க வைத்து பின்னர் என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளப்பட்ட திண்டுக்கல் பாண்டி என்ற ரவுடியின் வலது கரம். திண்டுக்கல்லைச் சேர்ந்த பல ரவுடிகள் தமிழகத்தின் இதர பகுதிகளில் வெறியாட்டம் போட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வாசலில்

பாறைப்பட்டியைச் சேர்ந்த சேர்ந்த பிரபல ரவுடி ஜேசுராஜை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்தது. திண்டுக்கல் முருகபவனத்தை சேர்ந்த கருப்பையா மகன் ராம்கி என்ற ராம்குமார், கடந்த ஆண்டு ஜனவரி

 மாதம் 26-ந் தேதியன்று திண்டுக்கல் மெயின்ரோட்டில் மொச்சை கொட்டை விநாயகர் கோவில் அருகே பட்டப்பகலில் 3 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் பீட்டர், ஜேசுராஜ் உட்பட 3 பேர்

 போலீசாரால் தேடப்பட்டு வந்தனர். ராம்குமார் கொலை செய்யப்பட்ட மறுநாளே பீட்டர் கை நரம்பு அறுக்கப்பட்ட நிலையில் திண்டுக்கல்-பழனி சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ராம்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய மற்றும் ஒருவர் முருகபவனம் அருகே கடந்த சில மாதங்களுக்கு

முன்பு காட்டுப்பகுதியில் பிணமாக கிடந்தார். இந்த நிலையில் ராம்குமார் கொலை வழக்கில் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஜேசுராஜ் மட்டும் ஆஜராகி வந்தார். இன்று ஜேசுராஜையும் ஓட ஓட விரட்டி பொதுமக்கள் முன்னிலையில் 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி சாய்த்துள்ளது. ராம்குமார் வெட்டி படுகொலை

 செய்யப்பட்டபோது அவர் இறக்கும்வரை 3 பேரும் ரசித்து பார்த்துவிட்டு அதன்பிறகே அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர். அதேபோல் இன்று ஜேசுராஜ் வெட்டப்பட்ட போதும் கொலையாளிகள் அவர் இறக்கும் வரை பார்த்துவிட்டு

இறந்தது உறுதி செய்யப்பட்ட பிறகே அந்த இடத்தை விட்டு சென்றனர். கொலையாளிகள் கொண்டு வந்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் அங்கேயே வீசிவிட்டு சென்றதால் இது பழிக்குப்பழியாக நடந்தது உறுதி செய்யப்பட்டது. அத்துடன் ராம்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேருமே இறந்துள்ளனர்.

திண்டுக்கல் சுற்றுவட்டார மக்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் பேருந்து நிலையம் பின்புறம்தான் இந்த நீதிமன்ற வளாகம் இருக்கிறது. நீதிமன்றத்துக்கு எதிரேதான் நகரின் பிரபலமான பெண்கள் பள்ளியும் அமைந்துள்ளது; அத்துடன் கொலைச் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து கூப்பிடுதூரத்தில்தான் காவல் நிலையமும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில் பட்டப்பகலில் நடந்துள்ள இக்கொலைச் சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 


 

0 கருத்துகள்:

Post a Comment