Search This Blog n

01 September 2014

காதல் வலைவீசி விபச்சாரத்தில் தள்ளப்பட்ட பெண்கள்

சீனாவில் பள்ளி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவின் ஹுபே (Hubei) மாகாணத்தில் பள்ளி மாணவிகள் உள்பட முப்பதுக்கும் மேற்பட்ட இளம் பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், இணையதளத்தின் வாயிலாக இளம் பெண்கள் மற்றும் மாணவிகளை ஏமாற்றி அவர்களை காதல் வலையில் ஒரு கும்பல் சிக்கவைக்கின்றது.
இதன்பின் அந்தப் பெண்களை யிசாங் (Yazing) நகருக்கு வரவழைத்து பாலியல் தொழிலில் தள்ளியுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் 14 முதல் 19 வயதுக்கு உள்பட்ட வயதினர் ஆவர்.
இந்நிலையில் பாலியல் தொழில் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் பள்ளி மாணவி ஒருவரின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர் என்றும் அதைத்தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில், இதுவரை 30 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

0 கருத்துகள்:

Post a Comment