Search This Blog n

03 September 2014

"செக்" வைத்த அரசு பார் செல்லும் பெண்களுக்கு

மகாராஷ்டிராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க ஹொட்டல்களில் உள்ள மதுமான கடைகளுக்கு செல்லும் பெண்களுக்கு தடைவிதிக்க மாநில அரசால் பரிந்துறைக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க விதிமுறைகளை பரிந்துரை செய்ய மகாராஷ்டிரா மாநில அரசின் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் தர்மாதிகாரி தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.
இந்த குழு ஹொட்டல்களில் உள்ள மது பானக்கடைகளுக்கு செல்லும் பெண்களுக்கு தடை விதிக்க வேண்டும் என பரிந்துறை செய்துள்ளது.
இதுகுறித்து அந்த குழுவினர் கூறுகையில், சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிடவை இளைஞர்களிடையே வன்முறை குணத்தை ஏற்படுத்துகின்றது.
எனவே ஆண்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் பெண்களை இழிவுபடுத்துவதால் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை கண்காணிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
மேலும் சமூக வலைதளங்களால் உலக அளவில் விவாகரத்து பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

0 கருத்துகள்:

Post a Comment