Search This Blog n

22 December 2012

சடலங்களின் மீது சிறுநீர் கழித்த அமெரிக்க வீரருக்கு?

படுகொலை செய்யப்பட்ட தலிபான்களின் சடலங்கள் மீது அமெரிக்க படையினர் சிறுநீர் கழித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த ஜனவரி மாதம் இறந்து கிடக்கும் தலிபான்களின் மீது அமெரிக்க படையினர் சிறுநீர் கழிப்பது போன்ற வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து உடனடியாக 3 அமெரிக்க கடற்படை வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் ஜோசப் சேம்பலின் என்பவரும் இக்குற்றத்தை செய்ததாகவும், புகைப்படத்திற்கு போஸ் கொடுத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.
இவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதால், இவரின் அதிகாரம் குறைக்கப்பட்டதோடு, 500 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

Post a Comment