Search This Blog n

08 December 2013

தனது மனைவியை ரூ.1.5 லட்சத்துக்கு விலை பேசிய கணவர்


மனைவியை நண்பர்கள் அனுபவிக்க ஒரு இரவுக்கு ரூ.1.5 லட்சத்திற்கு விலை பேசிய கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் இஷார் அலி லஷ்கர்(26). இவர் கடந்த நவம்பர் 28ம் திகதி மேற்கு வங்கத்தில் இருந்து மும்பைக்கு தனது 23 வயது மனைவியுடன் வந்துள்ளார்.
மும்பை மங்குட் ரயில் நிலையத்தில் வந்திறங்கியவுடன் அவர் அங்கு காத்திருந்த தனது நண்பர்கள் மொபின் குரேஷி(40), சஜித் குரேஷி(24), நிஜாம் கான்(25) மற்றும் சுஜித் குமார் சௌராஸ்யா(43) ஆகியோருடன் ஆட்டோவில் செல்லுமாறு தனது மனைவியை அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் தான் அந்த ஆட்டோவை பின் தொடர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். மும்பைக்கு வரும் முன்பு அவர் தனது மனைவியை ஒரு நாள் இரவு அனுபவிக்க நண்பர்கள் 4 பேரிடம் ரூ.1.5 லட்சம் விலை பேசியுள்ளார். அதன்படி தான் அந்த நால்வரும் அந்த பெண்ணை ஆட்டோவில் அழைத்துச் சென்றனர்.

ஆனால் செல்லும் வழியில் அவர்கள் லஷ்கரிடம் இருந்து தப்பிச் சென்று அந்த பெண்ணை பைங்கன்வாடியில் உள்ள ஜாகிர் ஹுசைன் நகருக்கு அழைத்துச் சென்றனர்.
அங்குள்ள ஒரு இடத்தில் வைத்து நவம்பர் 30ம் திகதி இரவு 9.30 மணி முதல் டிசம்பர் 1ம் திகதி அதிகாலை 3.30 மணி வரை அந்த 4 பேரும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இரவு 1.30 மணி வரை தனது மனைவியையும், அந்த நான்கு பேரையும் தேடிய லஷ்கர், தான் கேட்ட அளவுக்கு ரூ.1.5 லட்சம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்தார்.

பின்னர் விலையை ரூ. 50,000 ஆக குறைத்த அவர் ரூ.1,500 வரை இறங்கி வந்தார். ஆனால் அந்த 4 பேர் பணம் தர மறுத்ததால் தனது மனைவி கடத்தப்பட்டதாக பொலிசில் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த பொலிசார் அந்த 4 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் லஷ்கர் தான் பேரம் பேசி மனைவியை அனுப்பியதை அவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து பொலிசார் லஷ்கரையும் கைது செய்தனர்.

0 கருத்துகள்:

Post a Comment