Search This Blog n

28 December 2013

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம்

ஆந்திர மாநிலம் அனந்த்புர் மாவட்டத்தில் நாண்டேட் விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் பலியாயினர். இதில் பலியாவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று ரயில்வேத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுனக கார்கே அறிவித்துள்ளார்.

இன்று அதிகாலை 3.15 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பலர், புகையால் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர் என்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

Post a Comment