Search This Blog n

18 December 2013

தமிழக மீனவர்கள் சாகும் வரையில் உண்ணாவிரதம்


தமிழக மீனவர்கள் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனக் கோரி நாகப்பட்டினம் மீனவர்கள் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். சில பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

Post a Comment