Search This Blog n

08 December 2013

ஏடிஎம் கொள்ளையன் கைது?


பெங்களூர் ஏடிஎம் கொள்ளையனை பொலிசார் கைது செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெங்களூருவில் ஏ.டி.எம். மையத்தில் பெண் அதிகாரி ஜோதி உதய் என்பவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி, அரிவாளால் தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்யக்கோரி கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து அம்மாநில பொலிசார் குற்றவாளியை கண்டுபிடிக்க தீவிர முயற்சி எடுத்து வந்தனர்.
மேலும் குற்றவாளி குறித்து தகவல் தெரிவிப்போருக்கு பரிசுத் தொகையும் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் அந்த குற்றவாளி பெங்களூர் அருகே உள்ள தும்கூரில் இன்று காலை கைது செய்யப்பட்டதாக தும்கூர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

Post a Comment