Search This Blog n

20 December 2013

தமிழக மீனவர்கள் 30 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 30 பேரின் விளக்கமறியலை மல்லாகம் நீதிமன்றம் நீடித்துள்ளது. கடந்த நவம்பர் 5ஆம் திகதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம், புதுக்கோட்டையைச் சேர்ந்த 30 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இலங்கை மல்லாகம் நீதிமன்றத்தில் 30 மீனவர்களும் 5வது முறையாக ஆஜர்படுத்தப்பட்டனர். 30 மீனவர்களின் விளக்கமறியல் 2014 ஜனவரி 3 வரை நீட்டிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 மீனவர்கள் 30 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு.

0 கருத்துகள்:

Post a Comment