Search This Blog n

16 December 2013

45 பேர் கருகிய கோர விபத்து: ரகசியம் அம்பலமானது

பெங்களூரில் வோல்வோ பேருந்து விபத்திற்குள்ளான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 30ம் திகதி பெங்களூரில் இருந்து ஹைதராபாத் சென்ற வோல்வோ பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 45 பேர் உடல் கருகி பலியாகினர்.

அந்த பேருந்து ஆந்திர மாநிலம் மஹபூப்நகரில் சென்று கொண்டிருக்கையில் மீடியானில் இடித்து டீசல் டேங்க் தீப்பிடித்தது. தீ மளமளவென பேருந்தில் பரவியதில் தீபாவளி கொண்டாட ஊருக்கு சென்ற 45 பேர் உடல் கருகி பலியாகினர்.

இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பேருந்தை ஓட்டிய ஓட்டுனருக்கு இரண்டு நேரப்பணி போடப்பட்டதால் அவர் ஓய்வின்றி உழைத்தது தெரியவந்துள்ளது.
மேலும் ஓய்வில்லாததால் களைப்பாக இருந்த அவரால் பிரேக்கை கண்டுபிடிக்க முடியாமல் திணறியதும், பேருந்துக்குள் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்திருக்கின்றன போன்ற தகவல்களும் தெரியவந்துள்ளது.

0 கருத்துகள்:

Post a Comment