Search This Blog n

27 December 2013

சிறுமியை கடத்தி கற்பழித்த இளைஞன் கைது

சென்னையை சேர்ந்தவர் முகமது முஸ்தபா. இவர் ஐதராபாத்தில் உள்ள ஆசீப்நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இதன்போது பக்கத்து வீட்டை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாட்டு மற்றும் நடனம் கற்றுத்தருவதாக அவளது பெற்றோரிடம் கூறி,  குறித்த சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிகிறது.

இந்த சம்பவம் கடந்த 11ம் திகதி இடம்பெற்றுள்ளது. 
கேரளாவில் ஆலப்புழையிலுள்ள தனது நண்பர் வீட்டிற்கு கடத்தி சென்று கற்பழித்ததாக தெரிகிறது. மேலும் ஒரு சிறுமியை துபாய்க்கு கடத்த திட்டமிட்டதாக ஹுமாயுன்நகர் பொலிஸார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

போலி வாக்காளர் அடையாள அட்டையுடன் வலம் வந்த முகமது முஸ்தபா பலரிடம் முறைகேடு செய்து பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது.

கற்பழிப்பு, மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவரை ஐதராபாத் பொலிஸார் முல்லபள்ளி என்ற இடத்தில் கைது செய்தனர்.
 

0 கருத்துகள்:

Post a Comment