Search This Blog n

31 October 2013

இலங்கை மீனவர்கள் 24 பேர் இராமநாதபுரம் நீதிமன்றில்



இந்தியாவில் கைது செய்யப்பட்ட 24 இலங்கை மீனவர்களும் இன்று தூத்துக்குடிக்கு அழைத்துச் செல்லப்பட்டு இராமநாதபுரம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 24 பேர் தூத்துக்குடி அருகே கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி கடற்பரப்பில் தென்பகுதியில் 18 கடல் மைல் தொலைவில் 4 படகுகளில் 24 இலங்கை மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இதுபற்றிய தகவல் கடலோர காவல்படைக்குத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடந்து 24 இலங்கை மீனவர்களையும் கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர்.
 

0 கருத்துகள்:

Post a Comment