Search This Blog n

15 October 2013

அமெரிக்கக் கப்பல் குறித்து அறிக்கை கோரும்


தூத்துக்குடி அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இயங்கிய அமெரிக்கக் கப்பல் குறித்து அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசை மத்திய அரசு கோரியுள்ளது.

இந்தக் கப்பல் தொடர்பான விவரங்கள், அதன் ஊழியர்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்கள், இந்திய கடல் எல்லைக்குள் அது சுற்றித் திரிந்ததன் நோக்கம் ஆகியவற்றைக் கண்டறிவதற்காக விசாரணை நடத்தி வரும் தமிழக அரசு மற்றும் விசாரணை அமைப்புகளிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கோரியுள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
"எங்களுக்கு விரிவான அறிக்கை தேவை. அந்தக் கப்பலில் ஆயுதங்கள் இருந்துள்ளதாலும், இந்தியாவில் அக்கப்பல் சட்டவிரோதமாக டீசல் வாங்கியுள்ளதாலும் இது மிகவும் கவலையளிக்கும் விவகாரமாகும்'' என்றார்
 

0 கருத்துகள்:

Post a Comment