Search This Blog n

07 October 2013

ஆசிட் வீச்சில் உயிரிழந்த வினோதியினின் தாயார்


ஒருதலை காதலில் ஆசிட் வீசி கொலை செய்யப்பட்ட காரைக்கால் பெண் பொறியாளர் வினோதினியின் தாயார் மகளின் பிரிவு தாங்காமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காரைக்கால் எம்.எம்.ஜி. நகரை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி சரஸ்வதி(48). இவர்களுடைய மகள் வினோதினி(23). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.
வினோதினியின் குடும்ப நண்பர், காரைக்கால் திருவெட்டக்குடியை சேர்ந்த சுரேஷ்குமார் (33). இவருக்கு வினோதினியின் மீது ஒருதலை காதல்

ஏற்பட்டது. ஆனால் அவரது காதலை வினோதினி ஏற்க மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் கடந்த ஆண்டு நவம்பர் 14ம் திகதி வினோதினி மீது ஆசிட் வீசினார். முகம், உடல் வெந்த வினோதினி சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த பிப்ரவரி 12ம் திகதி இறந்தார்.
இதனைத் தொடர்ந்து வினோதினி கொலை வழக்கில் சுரேஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே சுரேஷ்குமார் கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

கொலையுண்ட வினோதினியின் நினைவு அவரது பெற்றோரை வாட்டி வதைத்தது. எனவே கடந்த 2 மாதத்துக்கு முன்பு சரஸ்வதியின் சொந்த ஊரான சீர்காழி அருகே உள்ள திருக்கடையூர் சென்று வசித்து வந்தனர்.
எனினும் மகள் இறந்த துயரில் இருந்து விடுபட முடியாமல் சரஸ்வதி தவித்து வந்தார். எனவே மகளை இழந்து வாழ்வதைவிட உயிர் விடுவதே மேல் என விபரீத முடிவு எடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு சரஸ்வதி தனது வீட்டில் விஷம் குடித்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த சரஸ்வதியை உறவினர்கள் மீட்டு திருக்கடையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே சரஸ்வதி பரிதாபமாக இறந்தார்.
அவரது உடலை கண்டு ஜெயபால் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
மேலும் திருக்கடையூர் பொலிஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

0 கருத்துகள்:

Post a Comment