Search This Blog n

24 October 2013

தக்க பதிலடி கொடுப்போம்: ஷிண்டே எச்சரிக்கை

 
பாகிஸ்தான் ராணுவம், போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி இந்திய எல்லையில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வரும் நிலையில், அப்பகுதிகளில் மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடுருவலுக்கு பதிலடி கொடுத்து வரும் இந்திய துருப்புக்களிடம், தற்போதுள்ள நிலைமையை கேட்டறிந்தார்.
பின்னர் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஷிண்டே, பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்தார். பாகிஸ்தான்

 எல்லைக்கு கூடுதலாக எல்லைப்பாதுகாப்பு படைகள் விரைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எல்லையில் உள்ள தீவிரவாதிகளுக்கு லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத் பயிற்சி அளித்து வருவதாக தகவல் வந்துள்ளது என்றும் ஷிண்டே தெரிவித்தார்.
 

0 கருத்துகள்:

Post a Comment