Search This Blog n

27 October 2013

என் தலைவர் பிரபாகரனையே கொன்று விட்டனர்: விஜயகாந்த்!



என் தலைவன் பிரபாகரனையே கொன்று விட்டனர் இனிமேல் கொமன்வெல்த் மாநாட்டில் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை பேசி என்ன நடக்கப் போகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பரபரப்பாக பேசியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று விஜயகாந்த்தை செய்தியாளர்கள் சந்தித்துள்ளனர்.

அப்போது இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாடு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் விஜயகாந்த்.
கேள்வி: கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதே?
பதில்: நான் என்ன சொல்ல வேண்டும். கனடா

 கலந்து கொள்ளாது, ஆனால் அந்நாட்டு பிரதிநிதி பங்கேற்பார் என்றும் இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடுமைக்கான எதிர்ப்பை பதிவு செய்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தற்போது பேசி என்ன நடக்கப்போகிறது? என் தலைவன் பிரபாகரனையே கொன்றுவிட்டனர், இனிமேல் பேசி என்ன ஆகப்போகிறது?
கேள்வி: மாநகர மினி பேருந்துகளில் இரட்டை இலை படம் வரையப்பட்டுள்ளதே?
பதில்: நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். ஜனநாயகத்தின் நான்காவது தூண் நீங்கள்தான்.
கேள்வி: தமிழகம் விரைவில் மின்மிகை மாநிலமாக மாற்றப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளாரே?

பதில்: அதை பொறுத்து இருந்துதான் பார்க்கணும். இப்பதான் அடுப்புல சோற்றை வைத்து இருக்கிறார், அது வெந்ததா? குலையுதா? என்பது மெதுவாகத்தான் தெரியும்.
$
மேலும் இப்போது மழைக்காலம் தொடங்கியுள்ளது என்றும் அது முடிந்த பிறகுதான் எல்லாம் தெரியும் எனவும் கூறியுள்ளார்.
 

0 கருத்துகள்:

Post a Comment