Search This Blog n

26 October 2013

பல இலட்சம் ரூபா பணத்தை உரியவர்களிடம் ஒப்படைந்த இந்தியர்


 
அவுஸ்திரேலியாவில் பயணி ஒருவர் தவறவிட்ட 65 லட்சம் ரூபா பணத்தை இந்திய டாக்சி சாரதி பத்திரமாக ஒப்படைத்து உள்ளார்.
அவுஸ்திரேலியாவில் வாகன கார் ஓட்டுநராக இருப்பவர் லக்விந்தர் சிங் தில்லான்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மெல்போர்ன் நகரில் பலர் இவரது வாடகை காரில் பயணம் செய்தனர்.
ஓய்வு நேரத்தின் போது, பின்புற சீட்டை தற்செயலாக பார்த்த தில்லான், அங்கு பை ஒன்றை கண்டார். அதை திறந்து பார்த்த போது கட்டுகட்டாக பணம் இருந்தது.

அன்றைய தினம் பலர், தனது காரில் பயணம் செய்ததால், அந்த பை யாருடையது என்பதில் இவருக்கு, குழப்பம் ஏற்பட்டது.
எனினும் பணத்தினை தவறவிட்ட பயணி டாக்சி நிறுவனத்தினை தொடர்பு கொண்டு பணம் காணாமல் போன விடயத்தை தெரிவித்துள்ளார்.
அப்போது, அங்கிருந்த தில்லான், ''என்னிடம் பணம் பத்திரமாக உள்ளது. வந்து பெற்று கொள்ளுங்கள்'' என, கூறினார்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட பயணியிடம், பையில் இருந்த 65 லட்சம் ரூபாய் பணம் ஒப்படைக்கப்பட்டது.
 

0 கருத்துகள்:

Post a Comment