Search This Blog n

05 October 2013

ரயில் கட்டணம் அக்டோபர் 7 முதல்2 % அதிகரிப்பு


  பயணிகள் ரயில் கட்டணம் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் 2 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது. புறநகர் ரயில்களின் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

டீசல், மின்சாரத்தின் விலை அதிகரிப்பினால் ரயில்வே துறைக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சரக்கு கட்டணங்களிலும் 2 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது அக்டோபர் 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

குளிர்சாதன வசதி வகுப்பு மற்றும் படுக்கை வசதிக்கான ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

அக்டோபர் 7ஆம் தேதிக்கு பிறகு பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களிடம் இருந்து கட்டண உயர்வு விகிதம் வசூலிக்கப்படும்.

கட்டண உயர்வின்படி ரூ. 1000 டிக்கெட்டைப் பெற ரூ. 20 கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். இந்தக் கட்டண உயர்வின் மூலம் ரயில்வே நிர்வாகத்துக்கு சுமார் ரூ. 1,250 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 டீசல் விலை 7.3 சதவீதமும், மின்சாரக் கட்டணம் 15 சதவீதமும் உயர்ந்துள்ளன.
 
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரயில் கட்டணங்களையும், சரக்கு கட்டணங்களையும் முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கத 

0 கருத்துகள்:

Post a Comment