Search This Blog n

29 April 2015

உயிருடன் 50 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட பெண்

நேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு பின் 50 மணி நேரத்திற்கு பிறகு கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து பெண் ஒருவர் இந்திய மீட்பு படையினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். சுனிதா சிதௌலா என்ற அந்த பெண் நேபாளத்தின் மகராஜ்கஞ்ச் பசுந்தாராவில் 5 மாடி கட்டிடம் தரைமட்டமானதில் கட்டிட குவியலுக்குள் சிக்கிக் கொண்டார்.
 அவரை 50 மணி நேரத்திற்கு பிறகு இந்திய பேரிடர் மீட்பு குழு வீரர்கள் பத்திரமாக உயிருடன் மீட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பிறகு, சற்று இயல்பு நிலைக்கு வந்த அவர் மறுபிறவி எடுத்தது போல் இருப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்தார். 
நேபாளத்தில் தாணு மருத்துவமனை, பலஜூத்ரா, பால்கு, குட்பால், பிரிஜேஸ்வரி, சவ்மாதி, காங்காபு பகவதி பாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்திய மீட்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment