Search This Blog n

19 April 2015

மீனவர் விவகாரத்தில் கடற்படையின் வழியில் இலங்கை மீனவர்கள்

இலங்கை மீனவர்கள் மேற்கொண்ட தாக்குதலினால் இந்திய மீனவர்கள் எழுவர் காயமடைந்துள்ளனர்.
நடுக்கடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட இந்திய மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மீனவர்களை தாக்கியதோடு அவர்களது உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய மீனவர்கள் பயணித்த படகிற்குள் சென்று இலங்கை மீனவர்கள் இத்தாக்குதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டதாக
 குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 
இலங்கை மீனவர்களின் தாக்குதல்களில் காயமடைந்த இந்திய மீனவர்கள் எழுவரும் கரைக்கு திரும்பியுள்ளதுடன்,
காயமடைந்தவர்கள் நாகை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment