Search This Blog n

21 April 2015

எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு தீ வைத்த 51 பேர் கைது

ஒடிசா மாநிலம் தெலாங் ரெயில் நிலையத்தில் பார்பில்–பூரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்க முயன்ற ஒரு
 சிறுவன் உயிர் இழந்தான். அங்கு அந்த எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு நிறுத்தம் இல்லாததே சிறுவன் உயிர் இழப்பிற்கு காரணம் என கூறி ஒரு வன்முறை கும்பல் ரெயிலுக்கு
 தீ வைத்தது. இதில் 2 பெட்டிகள் எரிந்து நாசமானது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் ரெயிலுக்கு தீ வைத்ததாக பூரி மாவட்டம் குவாலிப்பாரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த 51 பேரை போலீசார்
                                                         கைது செய்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment