Search This Blog n

15 September 2013

விலையில் வெளுத்துக் கட்டும் மல்லிகை


சுபமுகூர்த்தம் மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ மல்லிகைப்பூ கிலோ 600க்கு விற்பனை செய்யப்பட்டது.
சுபமுகூர்த்தம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிரடியாக உயர்ந்தது.
நாளை 16ம் திகதி சுபமுகூர்த்த தினம். அன்று நாடு முழுவதும் மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
நேற்று சேலம் வ.உ.சி. பூமார்க்கெட்டில் பூக்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

மல்லிகை, முல்லை, பட்டன் ரோஜா, ஜாதிமல்லி, கோழிக்கொண்டை, செவ்வந்திப் பூக்களை மக்கள் வாங்கிச் சென்றனர்.
நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ மல்லிகைப்பூ 600, முல்லை 600, கனகாம்பரம் 800, பட்டன் ரோஜா 200, செவ்வந்தி 140க்கும் விற்பனை செய்யப்பட்டது

0 கருத்துகள்:

Post a Comment