Search This Blog n

22 September 2013

லண்டன் விமான நிலையத்தில் பாபா ராம்தேவிடம்

  
 போலீசார் 8 மணி நேர தீவிர விசாரணை!  ..லண்டனுக்குச் சென்று இருந்த யோகா குரு பாபா ராம்தேவிடம், லண்டன் விமான நிலையத்தில் வைத்து பிரிட்டன் போலீசார் 8 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
 
பாபா ராம்தேவ், லண்டனில் நடக்க உள்ள விவேகானந்தர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று சொற்பொழிவாற்றவே அங்கு புறப்பட்டுச் சென்றார். அவர் கையில் சிறு கைப்பை மட்டுமே வைத்திருந்தார்.

 இந்நிலையில், அவரை லண்டன் போலீசார் சுமார் 8 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் விடுவித்துள்ளனர் என்றாலும் லண்டன் பத்திரிகைகளில் பாபா ராம்தேவ் கைப்பையில் ஏதோ மாத்திரைகள் வைத்து இருந்தார், எனவேதான் போலீசார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர் என்று தகவல்கள் வெளியிட்டுள்ளன.
  
கைப்பையில் அப்படி ஒன்றும் இல்லை என்று ராம்தேவின் செய்தித் தொடர்பாளர் கூறினாலும், அவர்கள் அதை நம்புவதாக இல்லை. எனவே, இவ்விடயத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தலையிட்டு, சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் அவர்,
 
விசா குறித்து மட்டுமே போலீசார் விசாரணை நடத்தினர் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

0 கருத்துகள்:

Post a Comment