Search This Blog n

23 September 2013

தமிழக மீனவர்கள் 20 பேருக்கு அக்டோபர் 7ஆம் தேதி வரை சிறை


 இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 20 தமிழக மீனவர்களுக்கு அக்டோபர் 7ஆம் தேதி வரை சிறை என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் நேற்று 20 தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ராமேஷ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை அக்டோபர் 7ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி ஆனந்தி கனகரத்தினம் உத்தரவிட்டதை அடுத்து, அவர்கள் அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்

0 கருத்துகள்:

Post a Comment