Search This Blog n

10 September 2013

பொருளாதார வளர்ச்சி குறைந்ததால்...

 
இந்தியாவின் வெளிநாட்டு கடன் 39 ஆயிரம் கோடி டாலராக உயர்வுபுகைப்படத்தைக் காண்.
பொருளாதார வளர்ச்சி குறைந்ததால்...இந்தியாவின் வெளிநாட்டு கடன் 39 ஆயிரம் கோடி டாலராக உயர்வு

புதுடில்லி: சென்ற 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவின் ஒட்டுமொத்த வெளிநாட்டு கடன், 12.9 சதவீதம் அதிகரித்து, 39 ஆயிரம் கோடி டாலராக (23.40 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.
நடப்பு கணக்கு பற்றாக்குறை:@@மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தொய்வு; இதன் காரணமாக, வர்த்தகம் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்திருப்பது, ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் அதிகரித்து உள்ளது.குறிப்பாக, சென்ற நிதியாண்டின் இறுதியில், மேற்கூறிய எதிர்மறை அம்சங்கள் காரணமாக, அயல்நாட்டுக் கடன் உயர்ந்து உள்ளது என, பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:சென்ற 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவின் வெளிநாட்டு கடன், 39 ஆயிரம் கோடி டாலராக உள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 34,550 கோடி டாலராக (20.73 லட்சம் கோடி ரூபாய்) குறைந்து இருந்தது.குறுகிய கால கடன், வர்த்தக கடன் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியரின் வங்கி டெபாசிட் ஆகியவை உயர்ந்துள்ளன. இவை, இந்தியாவின் வெளிநாட்டு கடன் உயர்விற்கு வழி வகுத்துள்ளன.மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிதியாண்டில், இந்தியாவின் நீண்ட கால வெளிநாட்டு கடன், 9.8 சதவீதம் அதிகரித்து, 29,340 கோடி டாலராக உயர்ந்துள்ளது.இதே காலத்தில், குறுகிய கால கடன், 23.7 சதவீதம் உயர்ந்து,9,670 கோடி டாலராக அதிகரித்துள்ளது.ஒட்டுமொத்த வெளிநாட்டு கடனில், நீண்ட கால கடன், 75.2 சதவீத பங்களிப்பை கொண்டு உள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள்:@@மேலும், வர்த்தக கடன் 31 சதவீதமும் குறுகிய கால கடன், 24.8 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளன. வெளிநாடு வாழ் இந்தியரின் டெபாசிட், 18.2 சதவீதமும், பல்வேறு கடன்களின் பங்களிப்பு, 13.2 சதவீதம் என்ற அளவிலும் உள்ளன.அதே சமயம், சென்ற நிதியாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த வெளிநாட்டு கடனில், மத்திய அரசின் அன்னிய கடன், 20.9 சதவீதம் (8,170 கோடி டாலர்) என்ற அளவில் குறைந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டில், 23.7 சதவீதமாக (8,190 கோடி

டாலர்இருந்தது.எனினும், இதே காலத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வெளிநாட்டு கடன், 19.7 சதவீதத்தில் இருந்து, 21.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு, ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளதும் காரணம். இருந்தபோதிலும், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும், இந்தியாவின் வெளிநாட்டு கடனுக்கும் இடையிலான விகிதாச்சார உயர்வு,கட்டுப்படுத்தக் கூடிய அளவிற்கே உள்ளது.

ஒப்பீடு:@@வளர்ந்து வரும் பிற நாடுகளின் அயல்நாட்டு கடனுடன் ஒப்பிடும்போது, பாதிக்கும் வாய்ப்பு குறைவாக உள்ள நாடுகளில் ஒன்றாக, இந்தியா தொடர்ந்து விளங்குகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

Post a Comment