Search This Blog n

28 September 2013

முதல்வர் ஜெயலலிதா உத்தரவு புதிய குடியிருப்புகள்:


 தமிழகத்தில் குடிசை மாற்று வாரியத்தின் கீழுள்ள 3 ஆயிரத்து 500 குடியிருப்புகளுக்குப் பதில் ரூ.280 கோடியில் புதிய குடியிருப்புகள் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
இது குறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

  தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தால் பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்காக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் பெரும்பாலும் பழுதடைந்துள்ளன. அதில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

  எனவே, அங்கு குடியிருக்கும் மக்கள் பாதுகாப்புடன் வாழ்தற்கு ஏற்ற வகையில், அந்தக் குடியிருப்புகளை இடித்துவிட்டு புதியதாக குடியிருப்புகளைக் கட்ட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

 முதல்கட்டமாக, நடப்பாண்டில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் ரங்கநாதபுரம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 480 குடியிருப்புகள் ரூ.38.40 கோடியிலும், பார்த்தசாரதி நகர் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 120 குடியிருப்புகள் ரூ.9.60
  
கோடியிலும், பெரம்பூரில் சத்தியவாணிமுத்து நகர் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 392 குடியிருப்புகள் ரூ.31.36 கோடியிலும், எழும்பூர் பகுதியில் நேரு பார்க் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 288 குடியிருப்புகள் ரூ.23.32 கோடியிலும், பிள்ளையார் கோயில் தெரு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 32 குடியிருப்புகள் ரூ.2.56 கோடி மதிப்பிலும் புதிதாகக் கட்டப்படவுள்ளது.

  மேலும், சேப்பாக்கம் பகுதியில் லாக் நகர் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 304 குடியிருப்புகள் ரூ.24.32 கோடியிலும், அயோத்தியா குப்பம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 708 குடியிருப்புகள் ரூ.56.64 கோடியிலும் கோட்டூர்புரத்தில் 136

  குடியிருப்புகள் ரூ.10.88 கோடியிலும், மயிலாப்பூர் ஆண்டிமான்யம் தோட்டத்திலுள்ள 48 குடியிருப்புகள் ரூ.3.84 கோடியிலும், பல்லக்குமான்யத்தில் 48 குடியிருப்புகள் ரூ.3.48 கோடியிலும் புதிதாக கட்டப்பட்டும்.

கோவை மாவட்டத்தில் ஆடுதொட்டி திட்டத்தின் கீழ் 246 குடியிருப்புகள் ரூ.19.68 கோடியிலும், திருச்சி மாவட்டம் திருச்சி-பூச்சான்குளம் திட்டத்தின் கீழுள்ள 587 குடியிருப்புகள் ரூ.46.96 கோடியிலும், நாகை மாவட்டம் நாகை கூடைமுடைவோர் காலனி திட்டத்தின் கீழ் 117 குடியிருப்புகள் ரூ.9.36 கோடியில் என மொத்தம் 3 ஆயிரத்து 500 குடியிருப்புகளை இடித்துவிட்டு ரூ.280 கோடியில் புதிய குடியிருப்புகளைக் கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா நிர்வாக ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

0 கருத்துகள்:

Post a Comment