Search This Blog n

16 September 2013

தேர்தல் பிரச்சாரத்திற்கு சச்சின்- ஷாருக்கானை அழைக்கும்



நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை அழைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சிக்கு நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களை வைத்து பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
அதன்படி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை பிரச்சாரத்திற்கு அழைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் எம்.பி.யுமான முகமது அசாருதீன் மூலம் சச்சினை அணுக திட்டமிடப்பட்டுள்ளதாம்.

இது தவிர இந்தி நடிகரும், காங்கிரஸ்காரருமான ராஜ் பாபர் மூலம் நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை ரேகாவை காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வைக்கும் திட்டமும் உள்ளதாம்.

இதில் சச்சினும், ரேகாவும் ஏற்கனவே ராஜ்யசபா உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

Post a Comment